பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 1000
Thirukkural Verse 1000 — Courtesy
ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று.
English Meaning
The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
கலைஞர்
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்