பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1015

    Thirukkural Verse 1015 — Modesty

    Thiruvalluvar

    பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு.


    English Meaning

    The world regards as the abode of modesty him who fear his own and other’s guilt.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

    சாலமன் பாப்பையா

    தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

    கலைஞர்

    தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்