அறத்துப்பால் (Aram)Chapter 11: செய்ந்நன்றி அறிதல்

    திருக்குறள் 103

    Thirukkural Verse 103 — Gratitude

    Thiruvalluvar

    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.


    English Meaning

    If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

    சாலமன் பாப்பையா

    இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

    கலைஞர்

    என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது