பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1038

    Thirukkural Verse 1038 — Agriculture

    Thiruvalluvar

    ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.


    English Meaning

    Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

    சாலமன் பாப்பையா

    உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

    கலைஞர்

    உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது