பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1044

    Thirukkural Verse 1044 — Poverty

    Thiruvalluvar

    இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்.


    English Meaning

    Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

    சாலமன் பாப்பையா

    நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

    கலைஞர்

    இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்