பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1053

    Thirukkural Verse 1053 — Begging

    Thiruvalluvar

    கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து.


    English Meaning

    There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

    சாலமன் பாப்பையா

    ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

    கலைஞர்

    உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்