பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 1064
Thirukkural Verse 1064 — The Dread of Begging
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு.
English Meaning
Even the whole world cannot suficiently praise the dignity that would not beg even in the midst of destitution.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
கலைஞர்
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது