பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1067

    Thirukkural Verse 1067 — The Dread of Begging

    Thiruvalluvar

    இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.


    English Meaning

    I beseech all beggars and say, “If you need to beg, never beg of those who give unwillingly.”

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

    சாலமன் பாப்பையா

    பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

    கலைஞர்

    கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்