காமத்துப்பால் (Inbam)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1093

    Thirukkural Verse 1093 — Reading Thoughts

    Thiruvalluvar

    நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.


    English Meaning

    She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

    சாலமன் பாப்பையா

    நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

    கலைஞர்

    கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது