அறத்துப்பால் (Aram)Chapter 2: வான் சிறப்பு
திருக்குறள் 11
Thirukkural Verse 11 — வான் சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
English Meaning
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
சாலமன் பாப்பையா
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்
கலைஞர்
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது