காமத்துப்பால் (Inbam)Chapter 110: புணர்ச்சி மகிழ்தல்
திருக்குறள் 1103
Thirukkural Verse 1103 — Enjoyment of Love
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.
English Meaning
Can the lotus-eyed Vishnu’s heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.
சாலமன் பாப்பையா
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?
கலைஞர்
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?