காமத்துப்பால் (Inbam)Chapter 111: நலம் புனைந்துரைத்தல்
திருக்குறள் 1112
Thirukkural Verse 1112 — நலம் புனைந்துரைத்தல்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று.
English Meaning
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.
சாலமன் பாப்பையா
நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)
கலைஞர்
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது