அறத்துப்பால் (Aram)Chapter 12: நடுவு நிலைமை
திருக்குறள் 112
Thirukkural Verse 112 — Impartiality
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
English Meaning
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
சாலமன் பாப்பையா
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்
கலைஞர்
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்