அறத்துப்பால் (Aram)Chapter 12: நடுவு நிலைமை
திருக்குறள் 114
Thirukkural Verse 114 — Impartiality
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்.
English Meaning
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
சாலமன் பாப்பையா
இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
கலைஞர்
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்