காமத்துப்பால் (Inbam)Chapter 114: அலர் அறிவுறுத்தல்

    திருக்குறள் 1146

    Thirukkural Verse 1146 — அலர் அறிவுறுத்தல்

    Thiruvalluvar

    கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.


    English Meaning

    It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

    சாலமன் பாப்பையா

    நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

    கலைஞர்

    காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது