காமத்துப்பால் (Inbam)Chapter 117: கண்விதுப்பழிதல்

    திருக்குறள் 1171

    Thirukkural Verse 1171 — Eyes' Sorrow

    Thiruvalluvar

    கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.


    English Meaning

    As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

    சாலமன் பாப்பையா

    தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?

    கலைஞர்

    கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?