காமத்துப்பால் (Inbam)Chapter 117: கண்விதுப்பழிதல்

    திருக்குறள் 1175

    Thirukkural Verse 1175 — Eyes' Sorrow

    Thiruvalluvar

    படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்.


    English Meaning

    Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

    சாலமன் பாப்பையா

    கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

    கலைஞர்

    கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன