காமத்துப்பால் (Inbam)Chapter 117: கண்விதுப்பழிதல்

    திருக்குறள் 1180

    Thirukkural Verse 1180 — Eyes' Sorrow

    Thiruvalluvar

    மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.


    English Meaning

    It is not dificult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

    சாலமன் பாப்பையா

    அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

    கலைஞர்

    காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல