காமத்துப்பால் (Inbam)Chapter 118: பசப்புறு பருவரல்

    திருக்குறள் 1187

    Thirukkural Verse 1187 — Pallor

    Thiruvalluvar

    புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.


    English Meaning

    I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

    சாலமன் பாப்பையா

    முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

    கலைஞர்

    தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!