காமத்துப்பால் (Inbam)Chapter 119: தனிப்படர் மிகுதி
திருக்குறள் 1191
Thirukkural Verse 1191 — Solitary Sorrow
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.
English Meaning
The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
சாலமன் பாப்பையா
தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.
கலைஞர்
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்