காமத்துப்பால் (Inbam)Chapter 120: நினைந்தவர் புலம்பல்
திருக்குறள் 1201
Thirukkural Verse 1201 — Memories
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.
English Meaning
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா
முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.
கலைஞர்
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்