காமத்துப்பால் (Inbam)Chapter 121: கனவுநிலை உரைத்தல்
திருக்குறள் 1212
Thirukkural Verse 1212 — Dream Visions
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.
English Meaning
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my suferings to my lord.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
சாலமன் பாப்பையா
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
கலைஞர்
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்