காமத்துப்பால் (Inbam)Chapter 124: நெஞ்சோடு கிளத்தல்
திருக்குறள் 1250
Thirukkural Verse 1250 — நெஞ்சோடு கிளத்தல்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்.
English Meaning
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.
சாலமன் பாப்பையா
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.
கலைஞர்
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது