காமத்துப்பால் (Inbam)Chapter 126: அவர்வயின் விதும்பல்

    திருக்குறள் 1261

    Thirukkural Verse 1261 — Longing for the Beloved

    Thiruvalluvar

    வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.


    English Meaning

    My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

    சாலமன் பாப்பையா

    அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.

    கலைஞர்

    வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன