காமத்துப்பால் (Inbam)Chapter 129: நெஞ்சோடு புலத்தல்
திருக்குறள் 1292
Thirukkural Verse 1292 — நெஞ்சோடு புலத்தல்
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
English Meaning
O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying “he will not be displeased.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
சாலமன் பாப்பையா
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!
கலைஞர்
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே