காமத்துப்பால் (Inbam)Chapter 131: புலவி நுணுக்கம்

    திருக்குறள் 1319

    Thirukkural Verse 1319 — Feigned Sulking

    Thiruvalluvar

    தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.


    English Meaning

    Even when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

    சாலமன் பாப்பையா

    ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.

    கலைஞர்

    நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள்