அறத்துப்பால் (Aram)Chapter 14: ஒழுக்கமுடைமை
திருக்குறள் 139
Thirukkural Verse 139 — The Possession of Decorum
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.
English Meaning
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
சாலமன் பாப்பையா
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
கலைஞர்
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்