அறத்துப்பால் (Aram)Chapter 15: பிறனில் விழையாமை
திருக்குறள் 142
Thirukkural Verse 142 — Not Coveting Another's Wife
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.
English Meaning
Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour’s door.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
சாலமன் பாப்பையா
பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை
கலைஞர்
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்