அறத்துப்பால் (Aram)Chapter 16: பொறையுடைமை
திருக்குறள் 151
Thirukkural Verse 151 — The Possession of Patience
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
English Meaning
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
சாலமன் பாப்பையா
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
கலைஞர்
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்