அறத்துப்பால் (Aram)Chapter 19: புறங்கூறாமை

    திருக்குறள் 184

    Thirukkural Verse 184 — Not Backbiting

    Thiruvalluvar

    கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.


    English Meaning

    Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

    சாலமன் பாப்பையா

    ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

    கலைஞர்

    நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு