அறத்துப்பால் (Aram)Chapter 2: வான் சிறப்பு
திருக்குறள் 20
Thirukkural Verse 20 — வான் சிறப்பு
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.
English Meaning
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
சாலமன் பாப்பையா
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது
கலைஞர்
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்