அறத்துப்பால் (Aram)Chapter 21: தீவினையச்சம்

    திருக்குறள் 210

    Thirukkural Verse 210 — Dread of Evil Deeds

    Thiruvalluvar

    அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.


    English Meaning

    Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

    சாலமன் பாப்பையா

    தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

    கலைஞர்

    வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க