அறத்துப்பால் (Aram)Chapter 22: ஒப்புரவறிதல்

    திருக்குறள் 212

    Thirukkural Verse 212 — Duty to Society

    Thiruvalluvar

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.


    English Meaning

    All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

    சாலமன் பாப்பையா

    முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

    கலைஞர்

    தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்