அறத்துப்பால் (Aram)Chapter 23: ஈகை
திருக்குறள் 227
Thirukkural Verse 227 — Giving
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
English Meaning
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
சாலமன் பாப்பையா
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
கலைஞர்
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை