அறத்துப்பால் (Aram)Chapter 3: நீத்தார் பெருமை
திருக்குறள் 23
Thirukkural Verse 23 — The Greatness of Ascetics
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
English Meaning
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது
சாலமன் பாப்பையா
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது
கலைஞர்
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்