அறத்துப்பால் (Aram)Chapter 25: அருளுடைமை
திருக்குறள் 243
Thirukkural Verse 243 — Compassion
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.
English Meaning
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
சாலமன் பாப்பையா
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
கலைஞர்
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்