அறத்துப்பால் (Aram)Chapter 25: அருளுடைமை

    திருக்குறள் 245

    Thirukkural Verse 245 — Compassion

    Thiruvalluvar

    அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.


    English Meaning

    This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

    சாலமன் பாப்பையா

    அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

    கலைஞர்

    உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று