அறத்துப்பால் (Aram)Chapter 27: தவம்
திருக்குறள் 268
Thirukkural Verse 268 — Penance
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.
English Meaning
All other creatures will worship him who has attained the control of his own soul.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
சாலமன் பாப்பையா
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
கலைஞர்
``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்