அறத்துப்பால் (Aram)Chapter 3: நீத்தார் பெருமை

    திருக்குறள் 27

    Thirukkural Verse 27 — The Greatness of Ascetics

    Thiruvalluvar

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.


    English Meaning

    The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

    சாலமன் பாப்பையா

    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

    கலைஞர்

    ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்