அறத்துப்பால் (Aram)Chapter 27: தவம்
திருக்குறள் 270
Thirukkural Verse 270 — Penance
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
English Meaning
Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
சாலமன் பாப்பையா
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.
கலைஞர்
ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்