அறத்துப்பால் (Aram)Chapter 28: கூடா ஒழுக்கம்
திருக்குறள் 272
Thirukkural Verse 272 — கூடா ஒழுக்கம்
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்.
English Meaning
What avails an appearance (of sanctity) high as heaven, if his mind sufers (the indulgence) of conscious sin.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.
சாலமன் பாப்பையா
தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?
கலைஞர்
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை