அறத்துப்பால் (Aram)Chapter 30: வாய்மை

    திருக்குறள் 296

    Thirukkural Verse 296 — Veracity

    Thiruvalluvar

    பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.


    English Meaning

    There is no praise like the praise of never uttering a falsehood: without causing any sufering, it will lead to every virtue.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

    சாலமன் பாப்பையா

    பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

    கலைஞர்

    பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்