அறத்துப்பால் (Aram)Chapter 1: கடவுள் வாழ்த்து

    திருக்குறள் 3

    Thirukkural Verse 3 — The Praise of God

    Thiruvalluvar

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.


    English Meaning

    They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

    சாலமன் பாப்பையா

    மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

    கலைஞர்

    மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்