அறத்துப்பால் (Aram)Chapter 32: இன்னா செய்யாமை

    திருக்குறள் 317

    Thirukkural Verse 317 — Not Injuring

    Thiruvalluvar

    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.


    English Meaning

    It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

    சாலமன் பாப்பையா

    எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

    கலைஞர்

    எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்