அறத்துப்பால் (Aram)Chapter 32: இன்னா செய்யாமை

    திருக்குறள் 319

    Thirukkural Verse 319 — Not Injuring

    Thiruvalluvar

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.


    English Meaning

    If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

    சாலமன் பாப்பையா

    அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

    கலைஞர்

    பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்