அறத்துப்பால் (Aram)Chapter 33: கொல்லாமை

    திருக்குறள் 321

    Thirukkural Verse 321 — Not Killing

    Thiruvalluvar

    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.


    English Meaning

    Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

    சாலமன் பாப்பையா

    அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

    கலைஞர்

    எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்