அறத்துப்பால் (Aram)Chapter 33: கொல்லாமை

    திருக்குறள் 326

    Thirukkural Verse 326 — Not Killing

    Thiruvalluvar

    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.


    English Meaning

    Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

    சாலமன் பாப்பையா

    கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

    கலைஞர்

    கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்