அறத்துப்பால் (Aram)Chapter 33: கொல்லாமை

    திருக்குறள் 329

    Thirukkural Verse 329 — Not Killing

    Thiruvalluvar

    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.


    English Meaning

    Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

    சாலமன் பாப்பையா

    கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

    கலைஞர்

    பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்