அறத்துப்பால் (Aram)Chapter 34: நிலையாமை

    திருக்குறள் 331

    Thirukkural Verse 331 — Instability

    Thiruvalluvar

    நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.


    English Meaning

    That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

    சாலமன் பாப்பையா

    நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

    கலைஞர்

    நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்