அறத்துப்பால் (Aram)Chapter 34: நிலையாமை

    திருக்குறள் 333

    Thirukkural Verse 333 — Instability

    Thiruvalluvar

    அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.


    English Meaning

    Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

    கலைஞர்

    நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்